மூன்றாவது முறையாக இந்தியாவில் மீண்டும் வெடித்து சிதறிய Oneplus Nord 2, OnePlus தரப்பில் வந்த பதில்
Oneplus Nord 2 பயனர் ஒருவரின் பாக்கட்டில் இருந்தபடியே வெடித்து சிதறிய சம்பவத்தினை தொடர்ந்து OnePlus நிறுவனம் பதில் தெரிவித்துள்ளது.
![OnePlus Nord 2 blasts](https://www.gadgetspan.com/media2/news/202118/oneplus-nord-2-blasts-india_gadgetspan-tamil-1.webp)
அடுத்த முறையாக இந்தியாவில் OnePlus nord 2 வெடித்து சிதறிய சம்பவமானது, துலே(Dhule) எனப்படும் நகரத்தில் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவில் இதைபோல் OnePlus Nord 2 வெடித்து சிதறியதை தொடர்ந்து, இது மூன்றாவது முறையாகும். அயல் நாடுகளிலும் OnePlus Nord 2-ஆனது வெடிப்பதாய் தகவல்கள் தெரியவருகின்றன.
இச்சம்பவத்தின்போது சம்மந்தப்பட்ட நபர் தனது ஜீன்ஸ் பேண்ட் வலதுபுற பாக்கெட்டில் OnePlus Nord 2 ஸ்மார்ட்போனை வைத்திருந்ததாக தெரிகிறது. திடீரென எதிர்பாராமல் அவரது பாக்கெட்டில் இருந்தபடியே OnePlus Nord 2 வெடித்து சிதறியதாய் கூறப்படுகிறது. இதனால் அவரது கால் தொடையானது கடுமையாக புண்பட்டு கருகிய நிலையில் காணப்பட்டது.
@OnePlus_IN Never expected this from you #OnePlusNord2Blast see what your product have done. Please be prepared for the consequences. Stop playing with peoples life. Because of you that boy is suffering contact asap. pic.twitter.com/5Wi9YCbnj8
— Suhit Sharma (@suhitrulz) November 3, 2021
இதனை Suhit Sharma என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், தெளிவான புகைப்படங்களுடன் ட்வீட் செய்திருந்தார். அவர் Oneplus நிறுவனத்தினை தனது டீவீட்டில் டேக் (tag) செய்திருந்ததை தொடர்ந்து, Oneplus-ன் அதிகாரபூர்வமான பக்கத்தில் இருந்து பதில் கூறப்பட்டிருந்தது.
OnePlus நிறுவனமானது, இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என விசாரித்து கொண்டு இருப்பதாகவும், ஏற்ற நடவடிக்கைகள் எடுக்க சிறிது கால அவகாசம் தருமாறும், தெளிவாக பதில் தெரிவிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ViaEnglish Title: OnePlus Nord 2 blasts for the third time in India, OnePlus responds